இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன் அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் குறித்த நிலை இலங்கையிலிருந்து விலகி பயணித்து கட்டம் கட்டமாக வலுவிழக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் , வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் , வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவும் மழைகொண்ட வானிலை எதிர்வரும் 2 நாட்களுக்கு நீடிக்குமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
