சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

Date:

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மொத்த வருமான இலக்கு 2.206 டிரில்லியன் ரூபாயாகும்.

அதில் ஒரு டிரில்லியன் ரூபாய் வருமானத்தை நேற்று முன்தினம் நிலவரப்படி ஈட்ட முடிந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் பாதியைக் கடப்பதற்கு முன்னரே இவ்வாறானதொரு பாரிய வருமான இலக்கை அடைய முடிந்தமை, சுங்கத் திணைக்கள வரலாற்றில் ஒரு விசேட மைல்கல் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசின் வருமான இலக்குகளை அடைவதற்கு சுங்கத் திணைக்களம் வழங்கும் பங்களிப்பை இந்த வெற்றி மேலும் உறுதிப்படுத்துவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வருடத்தின் எஞ்சிய காலப்பகுதியிலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வருமான இலக்குகளை அதிகரிப்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம்: வர்த்தகம் மற்றும் துறைமுக முதலீடுகளை மேம்படுத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை!

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி...

இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா...