தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

Date:

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு நிபந்தனை விதித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் கேட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.

இதுதொடர்பாக முடிவெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முழு ஆதரவை வழங்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத, எந்தவொரு வகுப்புவாத, மதவாத சக்தியையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை முன்வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய அரசு மட்டுமின்றி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களுக்கும் தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...