மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை (27) பி.ப. 07.00 மணி முதல் மறுநாள் (28) மு.ப. 07.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
