வெசாக் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

Date:

2026 ஆம் ஆண்டு தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மதுபான சாலைகள், இறைச்சிக் கடைகள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் இரவு விடுதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, மே 30, மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கால்நடை இறைச்சிக் கடைகளை மூடவும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்தி வைக்கவும், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள், மதுபானக் கடைகள் மற்றும் இரவு விடுதிகளை மூடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு அரச வெசாக் விழாவை முன்னிட்டு, மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...