வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

Date:

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான) பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

களனி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான சுமார் 300 மி.மீ. குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சியை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (22) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை, ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணி வரை 48 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.

இந்த எச்சரிக்கையின் படி, களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் உயர்வதால் ஹங்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம, கடுவலை, கொலன்னாவை, களனி, வத்தளை, மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட தாழ்வானப் பகுதிகள் பாதிக்கப்படலாம்.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், வெள்ள அபாயம் உள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...