இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ முனீர் முலப்பர் அவர்கள், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரிச் சேவைகள் மற்றும் ஹஜ் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இன்று (மே 23) சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, ஜெத்தாவிற்கான இலங்கைத் தூதர் நீதிபதி எம்.டி., பிரதி அமைச்சர் முகமது லஃபார் மற்றும் தூதரக அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து மிகவும் அன்போடும், உற்சாகத்தோடும் வரவேற்றனர்.
ஹஜ் கடமைகளுக்காக, இலங்கையிலிருந்து செல்லும் 3,500 யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிகள், போக்குவரத்து, மருத்துவம் மற்றும் ஏனைய அத்தியாவசிய நலன்புரிச் சேவைகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகளுடன் இணைந்து பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் அவர்கள் நேரில் களமாய்வு செய்து, மிக நெருக்கமாகக் கண்காணிக்கவுள்ளார்.
