அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

Date:

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் மே 6 வரை 904,855 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர், அவர்களின் எண்ணிக்கை 200,796 ஆகும். பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

எனினும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாளாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமானளவு குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி...

இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,...

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...