இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) உள்ளிட்ட தூதுக்குழுவினர், தமது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, நேற்று (08) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
வியட்நாம் – இலங்கை இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கையில் வெற்றிகரமான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
