இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

Date:

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், முறையான மற்றும் சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்தவோ அல்லது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சுமன ஹந்தகல தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (HPB) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

“ஆஸ்துமா நோய் என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு தொற்றாத நோயாகும். தற்போது உலகில் சுமார் 260 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிக அதிகமாகக் காணப்படுகிறது.”

உலகளவில் இந்நோயின் தீவிரம் குறித்து அவர் மேலும் விளக்குகையில், உலகெங்கிலும் நாளொன்றுக்கு சுமார் 1,000 பேர் ஆஸ்துமா நோய் காரணமாக உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, இந்நோய் அறிகுறி உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே தகுந்த சுவாசப் பிரிவு விசேட வைத்தியர்களை நாடி, உரிய ஆலோசனைகளையும் இன்ஹேலர் (Inhaler) உள்ளிட்ட முறையான சிகிச்சைகளையும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வது மரணங்களைத் தவிர்க்க இன்றியமையாதது என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை,...

வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது,...

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...