கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

Date:

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெறும் 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”உறுதியான ஆணை வழங்கிய கேரளத்திலுள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.

கடுமையாக போராடி, சிறப்பான பிரசாரத்தை மேற்கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்.

கேரளத்திடம் திறமையும், ஆற்றலும் இருக்கிறது. தற்போது இவ்விரண்டையும் பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைந்துள்ளது.

விரைவில் எனது கேரள குடும்பத்தினரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...