2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இது தொடர்பான வாய்மூலக் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
2026 ஆம் ஆண்டின் 2 ஆம் மற்றும் 3 ஆம் காலாண்டுகளுக்காக ‘தேசிய அமைப்பு இயக்குனரால்’ (National System Operator Private Company) முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பிலேயே இந்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளன. திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த இறுதித் தீர்மானம் மே மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
