1967க்குப் பிறகு தமிழக வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவையில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி: பதவியேற்றார் ஷாஜகான்.

Date:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் , விசிகவின் வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சருடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடியும். அதன்படி முதலமைச்சர் உள்பட 35 அமைச்சர்கள் பணியாற்றலாம்.

தற்போது மொத்தம் 33 அமைச்சர்களே பதவி ஏற்றிருப்பதால், கூடுதலாக 2 அமைச்சர்களை சேர்க்க வழிவகை உள்ளது. அந்த இடங்களில் தலா ஒரு இடம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் , விசிகவின் வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அவர்களுக்கு ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வன்னிஅரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ்  பழங்குடியினர் நலத்துறை  என்கிற சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பிறகு—குறிப்பாக 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு—தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் லீக் அமைச்சரவையில் பங்கு பெறுகிறது.

“முஸ்லிம்கள் இலவச வாக்கு வங்கி அல்ல, வாக்களிக்கும் இயந்திரமும் அல்ல, வாழ்வுரிமையைக் கேளுங்கள்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் சாத்தியமாகியுள்ளது.

கடந்த காலங்களில் திமுகவுக்கு சாசனம் எழுதிக் கொடுத்தது போல் கண்மூடித்தனமான விசுவாசத்தோடு இருந்த கோட்டை உடைக்கப்பட்டு, முஸ்லிம் லீக் தன் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

1967க்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் 2026இல் அமையப்பெற்றுள்ள தமிழகத்தின் முதல் கூட்டணி ஆட்சியில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் பங்கு பெறுகிறது முஸ்லிம் லீக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும்...

IMF இன் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில்,...