நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது. டெங்கு தாக்கம் அதிகமுள்ளதாக 42 அதிக அவதானம்மிக்க வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27465 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 14 டெங்கு மரணங்கள் சம்பவித்துள்ளன.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் 5930 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
