இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், நாட்டின் உப்பு ஏற்றுமதி மூலம் 205 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது. இந்த வருமானத்தை மேலும் விரிவுபடுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் 400 மில்லியன் டாலர் என்ற இலக்கை அடைவதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
உப்புத் தொழில்துறையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையில் (EDB) நடைபெற்றது. ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் கைத்தொழில் உற்பத்திப் பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
