கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

Date:

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மரணம் தொடர்பில் இதுவரை 10க்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

எயார்பஸ் கொள்வனவின் போது பில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்ற வந்த நிலையலில் அவர் கடந்த 8ம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது நான்கு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து வழக்கு இம்மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...

வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும்...