ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மரணம் தொடர்பில் இதுவரை 10க்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
எயார்பஸ் கொள்வனவின் போது பில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்ற வந்த நிலையலில் அவர் கடந்த 8ம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது நான்கு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து வழக்கு இம்மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
