கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

Date:

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெறும் 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”உறுதியான ஆணை வழங்கிய கேரளத்திலுள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.

கடுமையாக போராடி, சிறப்பான பிரசாரத்தை மேற்கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்.

கேரளத்திடம் திறமையும், ஆற்றலும் இருக்கிறது. தற்போது இவ்விரண்டையும் பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைந்துள்ளது.

விரைவில் எனது கேரள குடும்பத்தினரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம்...

வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும்...

2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம்...

சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக...