தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும்.
குறித்த பகுதிகளில 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி கிடைக்கும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றானது மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
