விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Date:

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

43 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அதி அவதான வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, 6 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவின் சமூக வைத்திய விசேட நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 26,071 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 13 மரணங்களும் பதிவாகியுள்ளன.

நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...