உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பின் வாதங்கள் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் நிறைவடைந்துள்ளன. மேலும், இரு தரப்பினரும் தங்களது எழுத்துமூல வாதங்களை செப்டெம்பர் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நவரத்ன மாரசிங்க, நீதிபதிகளான சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பின் வாதங்கள் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் நிறைவடைந்திருந்தன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில்...

2027ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம்...

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...