இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் விடுத்த அழைப்பிற்கிணங்க அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.
