கிராமிய மக்களின் வறுமையை போக்கும் நோக்கில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 1000 திட்டங்களை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக அபிவிருத்தி சபை ஊடாக அடையாளம் காணப்பட்ட உற்பத்தி பொபருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாய அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிப்பு செலுத்தும் வேலைத்திட்டங்களுக்கென 25 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
‘பிரஜா சக்தி – ஆயிரம் கிராமங்கள்’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலகத்திற்கு சொந்தமான அம்பன்கஸ்பிட்டிய பகுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
