இலங்கையில் 20% மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!

Date:

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் உடல் பருமன் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும் அவர் இதன்போது எச்சரித்தார்.

ஐந்து வயதுக்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் குறித்த அண்மைய கணக்கெடுப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி, வளர்ச்சி குன்றல் 10.1% ஆகவும், எடை குறைவு 16.1% ஆகவும் உள்ளது என்றும், அதே சமயம் அதிக எடை அளவு 0.5% ஆக ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரியவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதங்கள் குறித்த கவலைகளை அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உடல் பருமன் 47% பெண்களையும் 30% ஆண்களையும் பாதிக்கிறது என்றும், எதிர்காலத்தில் இந்த புள்ளிவிவரங்கள் முறையே 15% மற்றும் 6% ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...