ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பாக நேற்றைய (25) தினம் அபேசிங்கே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
