தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

Date:

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீப்பரவலைகட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபையிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது, எனினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தலங்கம பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை தொடங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...