நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்!

Date:

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 08, 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 14 மாவட்டங்களுக்குட்பட்ட 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக பொலிஸார் மற்றும் முப்படைகளின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும் என தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பரவும் அதிக அபாயம் உள்ள பகுதிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...