–Azeez Luthfullah.
வட இந்தியாவில் தொடர்ந்து பள்ளிவாசல்கள் குறிவைக்கப்படும் பதற்றமான சூழ்நிலையில், பார்மர் நகரில் மதங்களைக் கடந்து சகோதர சமுதாய மக்கள் இணைந்து நடத்திய அமைதிப் பேரணி, இந்தியாவின் உண்மையான சமூக நல்லிணக்கத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளது குறித்து எழுத்தாளர் அஸீஸ் லுத்புல்லாஹ் விவரிக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே வட இந்தியாவிலிருந்து குறிப்பாக இராஜஸ்தானிலிருந்து வருகின்ற செய்திகள் அனைத்தும் வேதனையளிப்பதாகவே இருந்து வந்தன.
சில பள்ளிவாசல்கள் ஷஹீதாக்கப்பட்டன (இடிக்கப்பட்டன). நான்கு மாவட்டங்களில் 350 பள்ளிவாசல்கள் ஆபத்துக்குள்ளாகி நிற்கின்றன.
11 ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து 16ஆம் தேதி இரவு அதனைப் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்குக் கொடுத்து 17ஆம் தேதி பகலில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அவலமும் நடந்திருக்கின்றது.
இந்த நிலையில் காயமுற்ற நெஞ்சங்களுக்கு ஒத்தடம் அளிக்கின்ற வகையில் பார்மர் நகரத்திலிருந்து அந்த இனிய செய்தி வந்துள்ளது.
அங்கு நான்கு பள்ளிவாசல்கள் குறி வைக்கப்பட, அந்தக் கொடுமையை அனுமதிக்க மாட்டோம் என்று சகோதர சமுதாயச் சொந்தங்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு அமைதிப் பேரணி நடத்தி எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். இன்று DM-இடம் மனுவையும் தந்திருக்கின்றார்கள்.
கான் மியான் கானியானி, ஆஜாத் சிங் ரத்தோர் ஆகிய இரண்டு நண்பர்கள் இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.
