நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு 14 மாவட்டங்களில் காணப்படுகிறது. 600 கிராம சேவகர் பிரிவுகளில் 3 நாள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு ஹூணுப்பிட்டிய கங்காரமை விகாரைக்கு அண்மையிலுள்ள பேர வாவியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
