2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.
எனினும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் ஏற்ப்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக இன்றைய தினம் சொத்து விபரங்களை முன்வைப்பதில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் அடுத்த மாதம் 7ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை தமது சொத்து விபரங்களை முன்வைப்பதற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் சொத்து விபரங்களை முன்வைப்பதற்கான இணையத்தளத்தை அணுக முயற்சித்துள்ளதால் இந்த தடங்கல் ஏற்ப்பட்டுள்ளதாகக தெரியவந்துள்ளது.
தமது சொத்து விபரங்களை முன்வைக்க தவறும் அரச ஊழியர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனப பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளது.
