இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

Date:

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது இலங்க‍ை உட்பட 10 நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்துறையை ஒழுங்குபடுத்துவதையும், ஆட்சேர்ப்பு செயல்முறையை நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திருத்தப்பட்ட தொழிலாளர் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய விதிகளின்படி, தென்னாப்பிரிக்கா, பெனின், எரிட்ரியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, இந்தியா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை நியமிக்கலாம்.
செனகலில் இருந்து ஆண் வீட்டுப் பணியாளர்களை மட்டுமே நியமிக்க அனுமதிக்கப்படும்.

அனைத்து ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் ஆளுநரக அளவிலான சேவை மையங்கள் மூலம் கையாளப்படும் என்றும், இது விண்ணப்பங்களை எளிமையாக்கி ஒழுங்கமைக்கும் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்றும் குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 27 நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...