இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

Date:

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது இலங்க‍ை உட்பட 10 நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்துறையை ஒழுங்குபடுத்துவதையும், ஆட்சேர்ப்பு செயல்முறையை நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திருத்தப்பட்ட தொழிலாளர் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய விதிகளின்படி, தென்னாப்பிரிக்கா, பெனின், எரிட்ரியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, இந்தியா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை நியமிக்கலாம்.
செனகலில் இருந்து ஆண் வீட்டுப் பணியாளர்களை மட்டுமே நியமிக்க அனுமதிக்கப்படும்.

அனைத்து ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் ஆளுநரக அளவிலான சேவை மையங்கள் மூலம் கையாளப்படும் என்றும், இது விண்ணப்பங்களை எளிமையாக்கி ஒழுங்கமைக்கும் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்றும் குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 27 நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

 

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...