இஸ்லாத்தை அவமதித்த வழக்கு: ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

Date:

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியது.

தன்னை விடுதலை செய்யக் கோரியும், தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தீர்ப்பினை வழங்கினார்.

 

இஸ்லாத்தை அவமதித்து, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, ஞானசார தேரருக்கு எதிராகக் பொலிஸார் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது.

விசாரணைக்குப் பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி, அவருக்குத் ஒன்பது மாத தண்டனை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,...

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...