ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்திவிடக் கூடாது: அருட்தந்தை சிறில் காமினி!

Date:

ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக் கூடாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் பல தரப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த விசாரணைகள் பாதியில் நிறுத்தப்பட்டால், அது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதியாகும் என்றும் அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...