உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையிலேயே இந்த மனு இன்று இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இன்று (24) நீதிமன்றில் மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகி மேலதிக வாதங்களையும் விபரங்களையும் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான மேலதிக விபரங்கள் மற்றும் வாதங்களை முன்வைப்பதற்கான விசாரணைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
