வெசாக் வாரத்தை முன்னிட்டு கொழும்பு, மீகொடை சந்தி அருகே அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் (தன்சல்) வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு (மே 31) இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள், ஹங்வெல்ல, அவிசாவளை மற்றும் பிலியந்தல பகுதிகளைச் சேர்ந்த 38, 35, 32, 15, 56 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களில் 3 ஆண்களும், இரண்டு பெண்களும் மற்றும் பாடசாலை செல்லும் வயதுடைய ஒரு சிறுமியும் அடங்குவர்.
