எல் நினோ காலநிலை மாற்றம் ஆரம்பமாகி, பலவீனமான மட்டத்தில் இருந்த போதிலும் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதன் தாக்கம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மாத்திரமன்றி பல நாடுகளில் அசாதாரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்படும் சாத்தியமுள்ளது. பூகோள வானிலை எதிர்வுகூறல் தரவுகளுக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி மாதம் வரை எல் நினோ நிலைமை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் 63 வீதம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
