நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் வன்முறை: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த பயங்கர மோதலில், மூன்று சிறை அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனால் கடந்த இரண்டு நாட்களில் நடந்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் ஒரு கைதியும் அடங்குவதோடு, பலியான மற்றொரு நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இன்று காலை 11.00 மணி நிலவரப்படி, சிறை அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை (STF) வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டை மீறிச் சென்ற கைதிகளின் வன்முறையை ஒடுக்க, காவல்துறையினர் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தற்போதும் சிறைக்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், மேலும் பல அதிகாரிகளும் கைதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்று விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததோடு, 33 பேர் காயமடைந்திருந்தனர். இன்று அதிகாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், காலை உணவுக்குப் பின் மீண்டும் புதிய வன்முறை வெடித்துள்ளது.

இரண்டு நாள் கலவரத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலை வளாகம் முழுவதும் காவல்துறையினரால் சூழப்பட்டுள்ளதுடன், சிறப்பு அதிரடிப்படையினர் (STF) சிறைக்குள் நுழைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...