இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த பயங்கர வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று காலை பலி எண்ணிக்கை 5 ஆகவும், பின்னர் 15 ஆகவும் பதிவாகியிருந்த நிலையில், மதிய நிலவரப்படி உயிரிழப்புகள் 19 ஆக அதிகரித்துள்ளது சிறைச்சாலை வரலாற்றில் மிக மோசமான வன்முறையாக மாறியுள்ளது.
இன்று அதிகாலை நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், காலை உணவுக்குப் பிறகு கைதிகள் மீண்டும் ஆயுதங்களுடன் மிகக் கொடூரமான முறையில் வன்முறையில் ஈடுபட்டதே இந்த பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகும்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறைச்சாலை வளாகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் காவல்துறை மற்றும் அதிரடிப்படையினர் (STF) தங்களது கைவசம் எடுத்துள்ளனர். நிலைமை இன்னமும் முழுமையாக சீரடையவில்லை என அஞ்சப்படுகிறது.
