நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

Date:

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 09 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

தற்போது பல முக்கிய வைத்தியசாலைகளின் கொள்ளளவு அதன் உச்சத்தை எட்டியுள்ளதால், வைத்தியசாலைகளில் கடும் நெருக்கடி மற்றும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...

எல் நினோ காலநிலையின் தாக்கம் ஒக்டோபர் முதல் அதிகரிக்கும்.

எல் நினோ காலநிலை மாற்றம் ஆரம்பமாகி, பலவீனமான மட்டத்தில் இருந்த போதிலும்...