இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு 2027ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1448) ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காக, தகுதிபெற்ற அதிகாரப்பூர்வ ஹஜ் பயண முகவர் அமைப்புகளின் (Hajj Travel Operators) பட்டியலை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முகவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான முகவர் அமைப்புகளின் பெயர்கள் அகரவரிசையில் (Alphabetical Order) பட்டியலிடப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பயண முகவர்களுக்கும் திணைக்களம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, இலங்கை யாத்திரிகர்கள் பாதுகாப்பான முறையிலும் சீராகவும் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்வதை உறுதிசெய்ய அவர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது. 

