நெல்சன் மண்டேலா தினம்: மட்டக்குளி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் விசேட திட்டம்!

Date:

சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தை முன்னிட்டு, கொழும்பு மட்டக்குளி  காக்கைத் தீவு கடற்கரையில் விசேட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இத்திட்டமானது தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தால், ‘கிளீன் ஓஷன் போர்ஸ்’ (Clean Ocean Force) அமைப்பு மற்றும் ராஜதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதி உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) உள்ளிட்ட பல முக்கிய ராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டின் சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்திற்கான உலகளாவிய கருப்பொருள், ”வறுமை மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்வது இன்னமும் நம் கைகளிலேயே உள்ளது”

அர்த்தமுள்ள மற்றும் நிலையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு கூட்டுப் பொறுப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் அவசியம் என்பதை இக்கருப்பொருள் நினைவூட்டுகிறது.

நெல்சன் மண்டேலா தன் வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாத்த உயரிய கொள்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இத்தூய்மைப் பணி அமைந்திருந்தது.

இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதன் மூலமும், கடல் வளங்களைப் பேணுவதன் மூலமும் ஆரோக்கியமான சமூகத்தையும், அனைவருக்குமான நிலையான எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்த கூட்டு முயற்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...