சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தை முன்னிட்டு, கொழும்பு மட்டக்குளி காக்கைத் தீவு கடற்கரையில் விசேட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இத்திட்டமானது தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தால், ‘கிளீன் ஓஷன் போர்ஸ்’ (Clean Ocean Force) அமைப்பு மற்றும் ராஜதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதி உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) உள்ளிட்ட பல முக்கிய ராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டின் சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்திற்கான உலகளாவிய கருப்பொருள், ”வறுமை மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்வது இன்னமும் நம் கைகளிலேயே உள்ளது”
அர்த்தமுள்ள மற்றும் நிலையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு கூட்டுப் பொறுப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் அவசியம் என்பதை இக்கருப்பொருள் நினைவூட்டுகிறது.
நெல்சன் மண்டேலா தன் வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாத்த உயரிய கொள்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இத்தூய்மைப் பணி அமைந்திருந்தது.
இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதன் மூலமும், கடல் வளங்களைப் பேணுவதன் மூலமும் ஆரோக்கியமான சமூகத்தையும், அனைவருக்குமான நிலையான எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்த கூட்டு முயற்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

