அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
அஸ்வெசும நலன்புரி உதவித்தொகைத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 999,502 பயனாளி குடும்பங்களுக்கு ₹9,241,892,500.00 (ஒன்பது பில்லியன் இருநூற்று நாற்பத்தொரு மில்லியன் எண்ணூற்று தொண்ணூற்றிரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்) வைப்பிலிடப்படவுள்ளது.
அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு ₹2,321,735,000.00 (இரண்டு பில்லியன் முந்நூற்று இருபத்தொரு மில்லியன் எழுநூற்று முப்பத்தைந்தாயிரம் ரூபாய்) வைப்பிலிடப்படவுள்ளது.
