தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நிலவும் பலத்த மழை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
