மஹர சிறைக் கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

Date:

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற கலவரத்தால் ரூ.150 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கலவரத்தின் போது சிறைச்சாலையின் பல கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

கட்டிடங்களின் கூரையோடுகள் உடைக்கப்பட்டதுடன், கைதிகளுக்கான தொழிற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கலவரத்தின் போது, கைதிகள் குறித்த தினத்தில் நள்ளிரவு வரை கற்களை வீசியதாகவும், சிறைச்சாலைக்கு அருகிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூஸா சிறைச்சாலை உள்ளிட்ட ஏழு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

4,100-க்கும் அதிகமான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில் தொடங்கிய கலவரம், நேற்று காலை 6.00 மணியளவில் பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒன்பது கைதிகள் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட போதைப்பொருள் தட்டுப்பாடே இந்த கலவரத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...