இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

Date:

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000 ஐக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்குட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 93,115 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 7,777 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 19,825 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 18,475 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், கண்டி மாவட்டத்தில் 6,726 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,066 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,013 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...

உண்மை கசப்பானதாக இருக்கலாம், ஆயினும் அது ஒன்றாகவே நிலைத்திருக்கிறது.

ஒரு சமூகத்தின் மேலும் வீழ்ச்சியடைவது அரிதாகவே வெளிப்புற அழுத்தங்களால் ஏற்படுகிறது. மாறாக, நம்பிக்கையை...

35 ஆண்டுகளுக்கு பிறகு பங்களாதேஷில் இன்று ஜனாதிபதித் தேர்தல்!

அண்டை நாடான பங்களாதேஷில் ஜனாதிபதி தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (20)...