2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது. 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்
.பரீட்சையில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
