நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார, அனர்த்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பத்து மாதங்களுக்கு முன்னர் ஒரு பயங்கரச் சூறாவளியை எதிர்கொண்ட இலங்கை, வெள்ளத்தின் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நேபாள மக்களின் துயரத்தைப் பகிர்ந்துகொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் மற்றும் பிரதமர் பலேந்திர ஷா உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி, நிவாரணம் மற்றும் மீளமைப்புப் பணிகள் தொடரும் நிலையில் நேபாள அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டினார்.
