அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

Date:

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகவும், கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும் வழக்கின் முன்னேற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சம்பந்தப்பட்ட சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை

இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்குத் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...