காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

Date:

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகபர் அந்நாட்டிலிருந்து இன்று (27) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல பாதாளக் குழு உறுப்பினரும் சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியுமான ‘பொடி லெஸி’ என அழைக்கப்படும் ஆருமாஹந்தி ஜனித் மதுசங்க இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை, இந்தியா சென்ற விசேட பொலிஸ் குழுவினரால், இன்று (27) அதிகாலை 5.55 மணிக்கு மும்பையில் இருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 142 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபருமான ‘பொடி லெஸி’ எனப்படும் ஜனித் மதுசங்க, 2024 டிசம்பர் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...