மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது:
ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால், பொதுமக்கள் தூதரகங்களைத் தொடர்புகொள்வதற்காக பிரத்யேக அவசர தொலைபேசி இலக்கங்கள் (Hotlines) தற்போது நிறுவப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு இதுவரையில் பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சோடு தொடர்ச்சியான தொடர்பில் உள்ளனர்.
தேவையான அவசர தொலைபேசி இலக்கங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
